Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, March 10, 2011

காதலி


காதலித்தவன் கவிஞனாகிறான் காதலியால்,
காதலியோ காவியமாகிறாள் காதலித்தவனால்...


இதோ,
கவிஞனாய் நான்...
காவியமாய் அவள்...

Sunday, February 6, 2011

இதுவும் ஒரு (காதல்) கவிதை..


பலமாத இடைவேளைக்குப் பிறகு
பார்த்தேன் அவளை...
என் அருகிலோ, எதிரிலோ அல்ல,
facebook-ல் - என் நண்பனின் friendlist-ல்.


துடித்தேன்.... 
அவள் - என் நண்பனின் friendlist-ல் இருபதற்காக அல்ல.......
அவள் - என் friendlist-ல் இல்லை என்பதற்காக.......


என் விரல்களோ, அவளின் பெயரருகில் இருக்கும் 
'Add as Friend' பட்டனை அழுத்த துடித்தது, mouse-ன் துணையோடு.......
என் மனமோ, அவளின் பெயரைப் பார்த்ததே போதும் - அவளின் 
'friend request'-க்காக  காத்திரு என்றது, நம்பிக்கையோடு.......


மாதங்கள் பல ஓடியது.
நான் அவளைப் பார்ப்பதும் தொடர்ந்தது (என் நண்பனின் friendlist-ல் தான்).
இடைவழியும் அதிகமானது.
அவள் என்னைக் கண்டுக்கொல்லாமல் இருப்பதும் தொடர்ந்தது.......


யோசித்தேன்...
ஒருவேளை அவள் என்னை நண்பனாகப் பார்க்காமல், அதற்க்கு மேல்.......
யோசித்தபோதே, அந்த நாள் என் மனத்திரையில் ஓடியது,
"I hate you, I never expected this from you, get lost...." என்றாள் அவள்.


அன்று - 
என் காதலைச் சொன்னால் 
இப்படி அவள் சொல்வாள் என்று தெரிந்திருந்தால்,
இன்று - 
என் friendlist-ல் இருந்திருப்பாள் அவள்.


தொடரும் என் காத்திருத்தல்.
காதலோடு அவள் வருவாள் என்றல்ல...
friend-ஆகா வருவாள் என்ற நம்பிக்கையில்.
நேரில் இல்லை என்றாலும், facebook-கிலாவது. 


computer-ஐ off செய்தேன்.
மனம் கேட்டது, "இதைப் போல் அவளும் காத்திருந்தாள்?"
உறங்கச் சென்றேன்.
கனவில் வந்தால் அவள்.  
கண் விழித்தேன்... சென்றேன் அவசரமாக computer-ஐ தேடி... 
அவளுக்கு 'friend request' அனுப்ப...



Regards,
Suresh R

Share This